தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

தமிழா நீ வீரனடா...

வீறு கொண்டு எழுந்து வா,,,
என் வீர தமிழா.
பூகம்பத்தை கடந்திடலாம்...
பூ கம்பத்தில் ஏறி நின்று புது புரட்சி செய்யலாம்.

வீறு கொண்டு எழுந்து வா,,,
என் வெற்றி தமிழா.
ஆழ் கடலில் இன்னும் ஏன் தத்தளிப்பு..?
அலைகளை கடந்து வா,,,
கரையில் உனக்கு பரிசளிப்பு.

வீறு கொண்டு எழுந்து வா,,,
என் சாதனை தமிழா.
சிகரத்தை கண்டு பயம் எதற்கு..?
உச்சியில் நின்று பார் சிறகுகள் முளைக்கும் உனக்கு.

வீறு கொண்டு எழுந்து வா,,,
என் புரட்சி தமிழா.
குற்றம் சொல்லும் சுற்றம் ஓயாது...
சுற்றங்களை விட்டு விடு,,,
மாற்றங்கள் செய்து விடு.

வீறு கொண்டு எழுந்து வா,,,
என் தங்கத் தமிழா.
வெறும் கையால் முழம் போட்டது போதும்...
கரங்களை தட்டு மலைகளும் நகரும்.

வீறு கொண்டு எழுந்து வா,,,
என் தாய் தமிழை பருகிய தமிழா.
உன் பெயரை உரைக்காத இதழ்களா..?
உனக்காக நடத்தும் இந்த உலகம் ஒரு வெற்றி விழா.

1 comments:

Anonymous said...

It's a wonderful poem..keep up the good work...

"Most of the important things in the world have been accomplished by people who have kept on trying when there seemed to be no hope at all."
Dale Carnegie